திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளரும் , தேசிய விருது பெற்ற சாதனையாளருமான முனைவர் லெட்சுமிபிரபா அவர்கள் இன்று 04/05/2024 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்லத்தில் உள்ள முதியோர், ஆதரவற்றோர், மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 56 நபர்களுக்கு தேவையான அரிசி, உறங்கும் பாய், போர்வை மற்றும் சானிட்டரி நாப்கின் போன்றவற்றை வழங்கி மகிழ்ந்தார்.
பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட உதவியாளர் இராமச்சந்திரன் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை .மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் அருண்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர் .
***
L.பாபு
திருச்சி செய்தியாளர்
L.பாபு
திருச்சி செய்தியாளர்



0 Comments