இதற்கிடையில், ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், அந்த நாடு "நிபந்தனையின்றி சரணடைய" வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதையே காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் அமெரிக்காவின் பலவீனமான வேலைவாய்ப்பு தரவுகள் காரணமாக, உலகளாவிய நிதிச் சந்தைகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கச்சா எண்ணெய் விலை 2023ம் ஆண்டிற்குப் பிறகு அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது, இது உலகப் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில தினங்களாகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8.5 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 92.69 டாலராக நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் இது 94 டாலரைக் கடந்து சாதனை படைத்தது. அதேபோல், அமெரிக்க கச்சா எண்ணெய் விலையும் 12.2 சதவீதம் உயர்ந்து 90.90 டாலராக வர்த்தகமானது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கு முக்கிய இடமாகத் திகழும் மத்திய கிழக்குப் பகுதிகளில் போர் விரிவடைந்து வருவதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.


0 Comments