NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி கோட்ட வணிக மேலாளர் சீனியர் டி.சி.எம் பழிவாங்கல் நடவடிக்கையை கண்டித்து டிஆர்இயு கண்டன ஆர்ப்பாட்டம்

 


திருச்சி, 
மார்ச்,2,

தொழிற்சங்க நிர்வாகியிடம் அநாகரிக முறையில் நடந்து கொண்ட டி .சி .எம் ஐ  கண்டித்து டிஆர் இயு  சார்பில்  கண்டித்து போஸ்டர் ஒட்டிய காரணத்திற்காக,  பழிவாங்கும் நோக்கத்தோடு, சீனியர் டி.சி.எம் மற்றும் டி .சி. எம் இருவரும் கூட்டு சேர்ந்து தொழிற்சங்க நிர்வாகி மீது வன்மத்தோடு பொய் குற்றச்சாட்டு சுமத்தியும், போலித்தனமாக செயற்கையாக தரவுகளை உருவாக்கி ரயில்வே விதியை மீறி எஸ். எம். இ (ஸ்பெஷல் மெடிக்கல் எக்ஸாமினேஷன்) (மனநிலை பரிசோதனைக்கு) அனுப்பியதை கண்டித்தும், அதோடு மட்டுமின்றி கடந்த 35 நாட்களாக தொழிலாளியை  சொந்த சிக் லீவில்  வைத்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பதையும்  திருச்சி கோட்ட  இரு கமர்சியல் பிரிவு அதிகாரிகளான சீனியர் டி.சி.எம் மற்றும் டி.சி.எம்  கண்டித்தும் டிஆர்இயு சார்பில் திங்களன்று ரயில்வே ஜங்ஷனில் உள்ள தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.




ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஆர். இ.யு திருச்சி கோட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பேபி ஷகிலா, உதவி பொதுச் செயலாளர் பி. கே. மாதவன்,திருச்சி கோட்ட செயலாளர் கரிகாலன்  ஆகியோர் கண்டன உரையாற்றினர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments