திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் காலை 06:30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 04:30 மணி முதல் 06:30 மணி வரையிலும் தடகளம், கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, ஊசூ (Martial Arts) ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி 15 நாட்கள் 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெற உள்ளது.
இதில் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாணவர் மாணவிகளும் பயிற்சி எடுத்து முடித்தவுடன் சான்றிதழ்களும் வழங்கப்படும். அவர்களுக்கு பயிற்சியின் போது ஊட்டச்சத்தும் வழங்கப்படும். இதற்கான முன் கட்டண தொகை Rs. 200 மேலும் முன்பதிவு நடந்து கொண்டு உள்ளது.
******
L.பாபு
திருச்சி செய்தியாளர்




0 Comments