திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன் பெறும் வகையில் ரூ 3.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மைய கட்டிடத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


0 Comments