திருச்சி, மார்ச் 10
திருச்சி செந்தண்ணீர்பும் முத்துமணி டவுன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மனைவி ஜெயஸ்ரீ (வயது 37) இவர் துபாயில் நடன கலைஞராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27ந்தேதி துபாயில் இருந்து திருச்சிக்கு திரும்பி விட்டார். இதையடுத்து கடந்த 7ந்தேதி இவர் வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயஸ்ரீ உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயஸ்ரீ இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 Comments