தருமபுரி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி தனது கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் ஊர்வலமாக வந்து தருமபுரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காயத்ரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதில் பாமக மாவட்ட செயலாளர் எஸ். பி. வெங்கடேஸ்வரன், பாஜக மாவட்ட செயலாளர் சரவணன், அதிமுக நகரச் செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.


0 Comments