NEWS UPDATE *** பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் புழக்கம் - ஆய்வு செய்ய மதுவிலக்கு , கலால் துறை ஆணையர் உத்தரவு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

கரூர் மாவட்ட அதிமுகவில் இருதரப்பினர் மோதல் - கட்சி அலுவலக பூட்டு உடைப்பு - பரபரப்பு !!!

திமுக அணி இரு பிரிவாக பிரிந்த நிலையில் கரூர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கரை  கட்சி பதவியிலிருந்து பொதுசெயலாளர் எடப்பாடி  பழனிசாமி நீக்கியிருந்தார் . அவருக்கு பதிலாக மேற்கு ஒன்றிய செயலாளர் கமலகண்ணன்  மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து  எடப்பாடி  பழனிசாமியிடம் வாழ்த்து  பெற்று கரூர் மாவட்ட அலுவலகத்திற்க்கு  கட்சியினர் வந்தனர் . நேற்று மதியமே கட்சி அலுவலகம் பூட்டப்பட்டு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்  . 



அலுவலக வாயிலில்  இருந்த எம் ஜி ஆர்  சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் கட்சியினர்  அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்றனர் . மாவட்ட செயலாளரின் அறை பூட்டப்பட்டிருந்ததால்  முன் அறையில் கட்சியினர் கமலகண்ணனுக்கு மாலை அணிவித்தனர். 


இதனை அறிந்த விஜயபஸ்கரின் ஆதரவாளர்கள் சுமார் 15 பேர் வந்து கட்சி அலுவலகத்தின்  பூட்டை  உடைத்து  செல்ல நீங்கள் யார் என கேள்வி கேட்டனர் . மேலும் இதனை போலீசார் நீங்கள் வேடிக்கை பார்க்காலாமா என வாக்குவாதம் செய்தனர் . 

எங்களை நியமித்தது  கட்சியின் பொது  செயலாளர் எடப்பாடி  பழனிசாமி நீங்கள் எங்களை கேள்வி கேட்க உரிமையில்லை என இரு தரப்பினரும் வாக்குவாதம்  செய்தனர் . 

பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் வெளியே போக சொல்லி போலீசாரின்  கட்டுப்பாட்டிற்க்கு  கட்சி அலுவலகத்தை கொண்டுவந்தனர் . 

இதனால் அங்கே சுமார் அரை  மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது 

Post a Comment

0 Comments