NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருநெடுங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் காசநோய் இல்லாத தமிழகம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி !

31/07/2024

மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில்  திருநெடுங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் காசநோய் இல்லாத தமிழகம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளியின் ஆசிரியர் திருமதி வி.உஷாராணி (பட்டதாரி ஆசிரியர்) அவர்கள் வரவேற்று பேசினார்.



கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியில் இயற்கை பேரழிவில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்  எ.சுரேந்திரக்குமார் அவர்கள் தலைமையில்.காசநோய் பற்றிய விழிப்புணர்வை திருமதி ரா.கீதா லெட்சுமி திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் திருமதி ம.முத்துச்செல்வி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்த்தினர்.








மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் தலைவர்  டி.செல்வராஜ்.துணைத்தலைவர் திருமதி இ.ரூபாதேவி மற்றும் த  இ.அருண், திருமதி வா.ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சின் நிறைவில் திருமதி.எஸ்.அருட்செல்வி நன்றியுரை கூறினார்.

**********

 
L.பாபு

தலைமை செய்தியாளர்

Post a Comment

0 Comments