திமுகழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் உற்ற நண்பரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட செயலாளரும் , பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அன்பில் பொய்யாமொழி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சி மாநகர கழகச் செயலாளர் , மு.மதிவாணன், மாவட்ட கழக நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, செந்தில், பகுதி செயலாளர் மோகன், ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
_________
0 Comments