NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் முஸ்லிம் மாணவர் பேரவை MSF உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

 

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - FSO சார்பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருச்சியில் முஸ்லிம் மாணவர் பேரவை MSF உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு இன்று காலை 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை மாநிலத் தலைவர் ஏ.எம்.எச்.அன்சர் அலி, எம்.எஸ்.எப். நிர்வாகிகள் வி.மைதீன் சிராஜுதீன், எஸ். முஹம்மது யூசுப், எம்.முஹம்மது அன்வர், ஆசிக் அலி மற்றும் என்.கே. அமீருதீன், ஜி.எச்..சையது முஸ்தபா, பி. அப்துல் சலாம், அரியமங்கலம் முஸ்தபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments