NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரையில் பள்ளி கல்வித்துறை பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம் துவக்கம்

 பள்ளி கல்வித்துறை பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம்   துவக்கம்.



தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மத்திய சிறை மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளியில் உள்ள எழுதப் படிக்கத் தெரியாத  சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம்  தொடங்கப்பட்டது.

மதுரை மத்திய சிறையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  இந்த சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் துவங்கப்பட்டு  96 ஆண்  சிறைவாசிகளும்,  பெண்கள் தனிச்சிறையில்  40 பெண் சிறைவாசிகளும் கல்வி பயின்றனர். 

தற்போது ஆறுமாத கால பயிற்சி  முடிவடைந்த நிலையில்  அடிப்படை எழுத்தறிவு  தேர்வு மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெற்றது.

இத்தேர்வு மையத்தினை மதுரை சரகர் சிறைத்துறை துணை தலைவர்  முருகேசன் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர்  மு.சதீஷ்குமார்,  தொடக்க கல்வி அலுவலர் கணேசன். ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆகியோர் பார்வையிட்டு தேர்வினை துவக்கி வைத்தனர்

Post a Comment

0 Comments