NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரை மாநகர் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா !

 மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக மதுரை மாநகர் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா இதில் மதுரை  மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான அய்யப்ப ராஜா தலைமையில்   நடைபெற்றது .



இந்த நீர் மோர் பந்தல் இம்மாதம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.இந்த நீர்மோர் பந்தலை மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments