திருச்சி மாநகராட்சி 12 வது வார்டு சிதம்பரம் மஹால் அருகே உள்ள சாக்கடை பாலத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாற்றுப்பாதை அமைக்காமல் முழுவதுமாக இடித்த நெடுஞ்சாலை துறையை கண்டிக்கும் மாற்றுப் பாதை உடனடியாக அமைக்க கோரி திருச்சி மாநகராட்சி மேயரிடம் இன்று 09.02.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிழக்குப் பகுதி குழு செயலாளர் S. சையது அபுதாஹீர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, மாவட்ட துணைச் செயலாளர் இரா. சுரேஷ் முத்துச்சாமி, அருண், சையது உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

.jpeg)
.jpeg)


0 Comments