27/11/2022
திருச்சி மாவட்டம் எசனைக்கோரைப் பள்ளியில் ONLINE மூலமாக NMMS தேர்விற்கானபயிற்சி அளித்து வரும் துபாயைச் சேர்ந்த குமார் அவர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்திருந்து மாணவர்களுடன் கலந்துரையாடி,இனிப்புகள் , பரிசுகள் வழங்கி எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வினை பள்ளித் தலைமை ஆசிரியர் திருமாவளவன், உதவி ஆசிரியைகள் திருமதி.கீதா, திருமதி.செல்வி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவச் செல்வங்களுடன், கிராம நிர்வாக அலுவலர் திரு.நாகேந்திரன், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.




0 Comments