NEWS UPDATE *** "கடந்த 3 நாட்களில் 5,600 பேர் எல்பிஜியிலிருந்து பிஎன்ஜி இணைப்புக்கு மாறியுள்ளனர்" பெட்ரோலியத்துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா பேட்டி *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகையை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

 தமிழக பாஜ க தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமியை  கண்டித்து திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகே  பாஜகவினர் ஆர்ப்பாட்டம்  நடத்தினர் . 




மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார் . முன்னாள் மாவட்ட தலைவர் பார்த்திபன் , பீமநகர் மண்டல தலைவர் குருராஜன் ,  செய்தி தொடர்பாளர் முரளி மற்றும் நிர்வாகிகள் , தொண்டர்கள் கலந்துகொண்டனர் .




இதில் இருவரது உருவ படங்களை எரிக்க முயன்றபோது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து படங்களை பறித்தனர் . இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டு பின்னர் அனைவரும் களைந்து சென்றனர் . 


*****

L.பாபு 

தலைமை செய்தியாளர் 

Post a Comment

0 Comments